Wednesday 14 September 2011

நாவைப் பேணுக!




நாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்!


உண்மை பேசுக!

'உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு;> அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.   
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 5:119)


நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். 

அழகானதைப் பேசுக!


பெற்றோருக்கும்;> உறவினர்களுக்கும்;> அநாதைகளுக்கும்;> மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.                                                  
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 2:83)


கனிவாகப் பேசுக!


உறவினர்களோ அநாதைகளோ;> ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.                         
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 4:8)


நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 6:152)


அன்பாகப் பேசுக!


அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 4:36 )


வீண் பேச்சை தவிர்த்துடுக!


நம் வேத வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால்;> அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 6:68)


பொய் பேசாதீர்!

 பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.          
    (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 22:30)


புறம் பேசாதீர்!


உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 49:12)


ஆதாரமின்றி பேசாதீர்!


யாதோர் ஆதாரமுமின்றி அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்.                             
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 40:35)


அவதூறு பேசாதீர்!


எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்;;
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 24:23)

No comments:

Post a Comment