Thursday 29 December 2011

கிறிஸ்துவர்களின் புத்தாண்டும்: முஸ்லிம்கள் பெறவேண்டிய எச்சரிக்கை செய்தியும்


 


கிறிஸ்துவ புத்தாண்டு ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுவது நாம் அறிந்த ஒன்றே. (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பை அடிப்படையாக கொண்டு தான் வருட கணக்கீடு (காலண்டர்) செய்யப்படுவதாக கிறிஸ்துவர்கள் கூறி கொள்கிறார்கள். அதாவது தற்போதய புத்தாண்டு 2012 என்றால் இயேசு அவர்கள் பிறந்து 2012 ஆண்டுகள் ஆகின்றன என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் நம்பிக்கை படி பார்த்தால் இயேசு (டிசம்பர் 25ம் தேதி) பிறந்து ஆறு நாட்களுக்குப் பின் அவர்கள் புத்தாண்டு ஏன் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு யாரிடமும் பதில் இல்லை, விட்டு தள்ளுங்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்துவ மூட நம்பிக்கை அடிப்படையிலானது என்பது மறுக்க முடியாத செய்தி. எனவே ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழும் மக்களான முஸ்லிம்களுக்கு அதில் கொண்டாட்டத்துக்கு இடமேதுமில்லை. இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாம் நேசிக்கிறோம். ஆனால் அவர்களின் (போலி) பிறந்த நாள் பெயரிலான புத்தாண்டு கொண்டாட்டத்தை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம்.

புத்தாண்டு கொண்டாடுவோர்; அதை கொண்டாடும் விதத்தை பார்த்தீர்களா?! மது குடித்து கும்மாளம் அடிப்பது, வாழ்த்து என்ற பெயரில் வம்பிழுப்பது, ( சாராயம் குடித்த வாய், பிறருக்கு வாழ்த்து சொல்லும் விசித்திரத்தைப் பாருங்கள்!)  பெண்களும் ஆண்களுமாக சேர்ந்து கொண்டு நடனம், சிற்றின்பம் அதை தொடர்ந்து விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது. இவ்வளவையும் செய்து கொண்டு இறைவனின் தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நினைவாக இதை செய்வதாக பொய்யுரைக்கிறார்கள்.

இறுதி இறைவேதம் குர்ஆனின் திருவசனம் இந்த பொய்யர்களின் முகமூடியை பின்வரும் வார்த்தைகளில் கிழித்தெறிகிறது.

''அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்யும் போது, ''எங்கள் மூதாதையர்களை இச்செயலின் மீதே கண்டோம். இன்னும் இறைவன் எங்களை இவ்வாறே ஏவினான்' என்று சொல்கிறார்கள். ''(அப்படியல்ல!) நிச்சயமாக இறைவன் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடுவதில்லை. - நீங்கள் அறியாத ஒன்றை இறைவன் மீது பொய்யாக இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?' என்று (இறுதி தூதரே!) நீர் கேட்பீராக.'
(இறுதிவேதம் குர்ஆன் 7:28)


புத்தாண்டு கொண்டாட்டங்கள் மானக்கேடான, அருவெறுப்பான தீமைகளின் மொத்த வடிவம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கேடு கெட்ட காரியத்தில் இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரை பயன்படுத்துவது கண்டனத்துக்கு உரியதாகும்.

அறியாமை என்ற போர்வையை போர்த்தி கொண்டு சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்கள். அவர்களின் மடமைக்கு பரிசுத்த இஸ்லாம் மார்க்கம் பொறுப்பல்ல.

 இஸ்லாம் மார்க்கத்தில் சில விஷயங்களில் இஸ்லாமிய கட்டளைகளை பின்பற்றுவது, சில காரியங்களில் பிற மதத்தாரை பின்பற்றுவது என்ற அவர்களின் இரட்டை நிலைப்பாட்டுக்கு இஸ்லாம் மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை.

ஏக இறைவனின் இறுதி தூதர் நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்

 ''எவர் (இறைநம்பிக்கை கொண்ட) நம்மை தவிர பிற மக்களின் வழிமுறையை ஒத்து நடக்கிறாரோ, அவர் நம்மை சேர்ந்தவர் அல்லர். நீங்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை போன்று நடந்து கொள்ளாதீர்கள்...!'
( ஆதார பதிவு நூல் - திர்மிதீ :2619)

Friday 23 December 2011

கிறிஸ்துவர்களின் பண்டிகை: முஸ்லிம்கள் பெறவேண்டிய எச்சரிக்கை செய்தி


கிறிஸ்துவர்களின் கிறிஸ்மஸ் பண்டிகை உண்மையின் மீது நிறுவப்பட்டதல்ல. (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதுள்ள அன்பின் அடிப்படையில் அவருடைய பிறந்த நாளை கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடுவதாக கிறிஸ்துவர்கள் நியாயம் பேசுகிறார்கள்.

சற்று ஒரு முரண்பாட்டை பாருங்கள். கிறிஸ்துவர்கள் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவனாக கருதி கொள்கிறார்கள். அதே நேரத்தில் 'இறைவனுக்கு' பிறந்த நாளும் அனுசரிக்கிறார்கள். மனிதர்களை படைத்த இறைவனுக்கு பிறந்த நாளா?! எத்தகைய விசித்திரமான முரண்பாடு!

உறுதியான, உண்மை என்னவென்றால் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனும் இல்லை. இறைவன், மனிதனாக அவதரிக்கவும் இல்லை. அவர் ஓர் இறைத்தூதர் மட்டுமே. இந்த கிறிஸ்துவர்கள,; உண்மையில் சிலை வழிபாடு மக்களின் அவதார கொள்கையை காப்பியடித்து வைத்திருக்கிறார்கள். 

இறுதி வேதம் குர்ஆன் , கிறிஸ்துவர்களின் நிலையை பின்வருமாறு கூறுகிறது.
''இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு ஒப்பானதையே இ(ந்த கிறிஸ்து)வர்களும் கூறுகிறார்கள்.'
(இறுதி வேதம் குர்ஆன் 5:30)

கிறிஸ்துவர்கள் 'நேசத்தின்' அடிப்படையில் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வேத ஆதாரமற்ற பிறந்த நாள் கொண்டாடும் முறையே, கிறிஸ்துவர்கள் யார் என்பதை உலகுக்கு பறைசாற்றுகிறது.

உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் தினம் பெரும் உற்சாகத்தோடு அவர்களின் வேத நூலிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான மதுபானங்களுடனும் (ஏசாயா 5:11) பன்றி இறைச்சியுடனும் (லேவிய ராகமம் 11:7,8) கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி ஒழுக்க கேட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆபாச ஆடல், பாடல்கள் என்று கிறிஸ்மஸ் களைகட்டுகிறது. (விபச்சார தடை - யாத்திராகமம் 21:14). இதுதான் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் முறையா?

முஸ்லிம்களாகிய நாம், கிறிஸ்மஸ் எனும் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெயரிலான போலி பிறந்த தினத்தன்று மேற்படி செய்தியை உலகறிய செய்வதுடன் சில எச்சரிக்கை விஷயங்களையும் மேற்கொண்டாக வேண்டும்.

.பொய்யை அடைப்படையாக கொண்ட, இந்த கிறிஸ்மஸ் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் போலி மத நல்லிணக்கம் என்ற அடிப்படையிலும் கூட நாம் கலந்து கொள்ள கூடாது.

.அன்றைய நாளில் கிறிஸ்துவர்களின் உணவு பண்டங்கள் விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* கிறிஸ்மஸ் கேக் வகைகள் 'உயர் ரக' மது கலந்து செய்யப்படுகின்றன என்று அவர்களே கூறுகிறார்கள். கேக் போன்றே பிற உணவு வகைகளும் சந்தேகத்துக்கு இடமானவையே. கிறிஸ்துவர்களால் உருவாக்கப்படும் அனைத்து வகை உணவுகளிலும் பன்றி கொழுப்பு 'சுவைக்காக' சேர்க்கப்படுவதாக அவர்களே வாக்குமூலம் அளிக்கிறார்கள். ஆசிய நாடுகளில் அவ்வாறில்லை என்றெல்லாம் கருதி கொள்ளாதீர்கள். தென் கொரியாவிலுள்ள கிறிஸ்துவர்களின் உணவு வகைகளில் ஏறத்தாழ அனைத்திலும் பன்றி கொழுப்பு சேர்க்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் அவ்வாறில்லை என்று சொல்லி விட முடியாது.

* கிறிஸ்மஸ் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நீங்களோ, உங்களுடைய குழந்தைகளோ பங்கேற்காதீர்கள். அதை வேடிக்கையும் பார்க்காதீர்கள். ஏனெனில் கிறிஸ்மஸ் எனும் அவர்களின் குற்றசெயலுக்காக இறைதண்டனை அவர்கள் மீது இறங்கும் போது நீங்களும் அதில் சிக்கி கொள்வீர்கள். 

கிறிஸ்துவர்கள் நேர்வழி பெற்று இஸ்லாம் மார்க்கத்தை ஏற்க அல்லாவிடம் துஆ செய்யுங்கள்.

Friday 16 December 2011

கிறிஸ்துவர்களின் பண்டிகை: முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?



கிறிஸ்துவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்மஸ் எனும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்த காலகட்டத்தில் அந்த பண்டிகையை முன்வைத்து பெரும் ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றனர்;. கிறிஸ்மஸ் தாத்தா என்ற பெயரில் சில மனிதர்களுக்கு ஒட்டு தலைமுடி, தாடி வைத்து கேக் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் பறிமாறி தம்முடைய பிரச்சாரம், பிறரை எளிதில் எட்டுமாறு செய்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இறைத்தூதர் (இயேசு) ஈஸா  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படுவதாக கிறிஸ்துவர்கள் கூறி கொள்கிறார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தைப்பற்றி ஓரளவே தெரிந்த முஸ்லிம்களில் சிலர், விஷயத்தின் விபரீதம் புரியாமல் கிறிஸ்மஸ் வாழ்த்து கூறுவது, கிறிஸ்துமஸ் தாத்தா எனும் வேடமிட்டு வலம் வரும் மனிதனை பார்த்து, சிரித்து மகிழ்வது என்று சில காரியங்களை செய்து வருகிறார்கள்.

இப்போது முஸ்லிம்களாகிய நாம் செய்யவேண்டியது தான் என்ன என்பதை பார்ப்போம்.

இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விஷயத்தில் உரிமை கோர கிறிஸ்துவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரே இறைவனை மட்டுமே வணங்கினார். கிறிஸ்துவர்கள் மூன்று கடவுள்களை வணங்குகிறார்கள்.

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை தானே வணங்கி கொள்ளவில்லை. தன்னுடைய தாயாராகிய (மேரி)மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு போதும் வணங்கவில்லை. 

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பரலோகத்தில் உள்ள ஒரே இறைவனை மட்டுமே வணங்கினார். அந்த ஒரே இறைவனையே வணங்குமாறு பிறருக்கு உத்தரவிட்டார்.

'மஸீஹ் (இயேசு)கூறினார்: 'இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும் , உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'.      
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 5:72) 

கிறிஸ்துவர்கள் தம்முடைய சுய கற்பனை படி (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம், (மேரி) மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் வணங்குகிறார்கள்.


தொன்று தொட்ட இறைத்தூதர்கள் (நோவா) நூஹ் அலைஹிஸ்ஸலாம், (ஆப்ரஹாம்) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், (மோஸே) மூஸா  அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் அனைவரும் ஒரே இறைவனையே வணங்கினார்கள். எனவே கிறிஸ்துவர்களின் முக்கடவுள் (திரித்துவ )வழிபாடு மாபெரும் இறைதுரோக செயலாகும். அதிலும் ஒரே இறைவன் என்பதை போதிக்க வந்த (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையே பின்னர் வணங்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த இறைதுரோக வழிபாட்டை பிரபலப்படுத்த் கிறிஸ்துவர்கள் கையாளும் வேத ஆதாரமற்ற உத்தி தான் இந்த கிறிஸ்மஸ் வழிபாடு.

முஸ்லிம்களாகிய நாம், இறுதி தூதர் நபீ (ஸல்), அவர்களை நேசிப்பது போலவே (இயேசு)  ஈஸா அலைஹிஸ்ஸலாம அவர்களையும் நேசிக்கிறோம். ஏனென்றால் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,  ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் போதித்தார்கள், கடைப்பிடித்தார்கள். இறுதித்தூதர் நபீ (ஸல்); அவர்களும் அந்த ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் போதித்தார்கள், கடைப்பிடித்தார்கள். முஸ்லிம்களாகிய நாமும் ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் கடைப்பிடித்து வாழ்கிறோம். இப்போது சொல்லுங்கள்... (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவோர் முஸ்லிம்களா? பிதா, மகன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுளர்கள் கொள்கை கொண்ட வழிகேடர்களான கிறிஸ்துவர்களா?


எனவே, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நேசத்திற்கான வழியல்ல என பிரகடனப்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்முடைய கடமையாகும்.

உறவுகளைப் பேணுவோம்


இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட அமல்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

 ஆனால் மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இரத்த உறவை விட நட்பையும், இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர,; குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட செலவிடத் தயாராக இல்லை.

நட்பு நாமாகத் தேர்வு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இவர்கள் உன் அப்பா, அம்மா இவர்கள் உன் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி என்பது அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் மார்க்கக் கடமையாகும்.

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள், ' உறவு (ரஹம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்' என்று கூறுகிறான்.   
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரீ : 5988

இந்த ஹதீஸின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது எனபது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமானது என்பதை நாம் அறியலாம்.

ஒரு மனிதர், நபீ(ஸல்)அவர்களிடம் வந்து, '' அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒர் அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார். அதற்கு நபீ(ஸல்)அவர்கள், நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்து வா, குடும்ப உறவைப் பேணிக்கொள்' என்றார்கள். 
(அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்'. 
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) ஆதாரம் : புஹாரீ: 5984

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும,; வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும், யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமதுஉறவைப் பேணி வாழட்டும். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). ஆதாரம் : புஹாரீ :5985

'யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் பேணி நடக்கட்டும் ' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம்

அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் உள்ளது. 

குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு பயந்து குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும், அன்பையும் பெறுவோமாக! 

Friday 2 December 2011

பெற்றோரைப் பேணுவோம்


 

ஒரு மனிதர் நபீ(ஸல்)அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார். அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் 'உம்முடைய தாய்' என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் 'உம்முடைய தாய்' என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது 'உம்முடைய தந்தை' என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புஹாரீ, முஸ்லிம்

'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்;. அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்;. இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 31:14)

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை 'உஃப்' (சீ!) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்;;அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் ; இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 17:23)

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 17:24)

பெற்றோரின் திருப்தி

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபீ(ஸல்) கூறிய போது அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டது.  அதற்கு , ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபீ(ஸல்)பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), புஹாரீ

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை, மரணத்திற்கு முன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபீ(ஸல்)அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ


'அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! என்று நபீ (ஸல); கூறியபோது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! (இழிவடையட்டும் என்றீர்களே) யார்'? என்று வினவினார்கள், 'முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அடைந்திருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்' என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

   அல்லாஹ்வின் தூதர் நபீ(ஸல்) அவர்கள் நமக்கு கூறிச்சென்ற இந்த அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவோமாக!

பெரும்பாவங்கள்


பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நபீ(ஸல்)அவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் வினவினேன், அதற்கு அவர்கள் 'நல்லொழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்சரிக்கும், அதை பிறர் அறிவதை நீ வெறுப்பாய் ' என விளக்கமளித்தார்கள்.
(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன், நூல்: முஸ்லிம்)

ஒருமுறை நபீ(ஸல்);அவர்கள் தம் தோழர்களிடம் 'அழிவைத் தரும் ஏழு பாவங்களை' தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரித்தார்கள். அவை யாவை? என நபீத்தோழர்கள் கேட்டபோது, பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: 

1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது
2. சூனியம் செய்வது
3. இறைவன் தடுத்த ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்வது 
4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது
5. வட்டிப்பொருளை உண்ணுவது 
6. போரில் புற முதுகு காட்டி ஓடுவது
7. விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
(அறிவிப்பவர். அபூஹுரைரா(ரலி) நூல்கள் புகாரீ, முஸ்லிம்)

மேலே கூறப்பட்ட நபீமொழியில் பெரும் பாவங்கள் அனைத்தும் கூறப்படவில்லை. அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய பாவங்களில் சில மட்டுமே கூறப்பட்டுள்ளது. கொலை, களவு, விபச்சாரம், தடுக்கப் பட்டவைகளை உண்ணுதல்,பருகுதல் , பொய், கோள் சொல்லுதல் போன்ற குற்றங்களும் பெரும் பாவங்களைச் சார்ந்தவையாகும். 

பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினாலும், நபீ(ஸல்) அவர்களாலும் விலக்கப்பட்டவைகளைக் குறிக்கும். இவற்றைச் செய்பவன்; இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.

பெரும் பாவங்களைத் தவிர்த்து வாழ்ந்தால் ஏனைய சிறு பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்:-

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (சிறு)பாவங்களை உங்களை விட்டு நாம் போக்குவோம், உங்களை நாம், மதிப்பு மிக்க இடத்தில் புகுத்துவோம்.
  (உலக பொது வேதம் அல்-குர்ஆன் 4: 31)

(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்ப்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள். 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 42: 37)

(இறை நம்பிக்கை கொண்ட) அவர்கள் சிறு தவறுகளைத் தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்தும் மானக்கேடனவற்றிலிருந்தும் விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 53: 32)

' ஐந்து நேரத் தொழுகைகளும் , ஒவ்வொரு ஜும்ஆவும் , ஒவ்வொரு ரமளானும் , ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யப் பட கூடிய பாவங்களுக்கு பரிகாரமாகும். (ஆனால்) இடைப்பட்ட காலங்களில் அவர் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை என நபீ(ஸல்) கூறினார்கள்.            
 (ஆதாரம்: முஸ்லிம் , திர்மிதீ, அஹ்மத்)