Friday 23 December 2011

கிறிஸ்துவர்களின் பண்டிகை: முஸ்லிம்கள் பெறவேண்டிய எச்சரிக்கை செய்தி


கிறிஸ்துவர்களின் கிறிஸ்மஸ் பண்டிகை உண்மையின் மீது நிறுவப்பட்டதல்ல. (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதுள்ள அன்பின் அடிப்படையில் அவருடைய பிறந்த நாளை கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடுவதாக கிறிஸ்துவர்கள் நியாயம் பேசுகிறார்கள்.

சற்று ஒரு முரண்பாட்டை பாருங்கள். கிறிஸ்துவர்கள் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவனாக கருதி கொள்கிறார்கள். அதே நேரத்தில் 'இறைவனுக்கு' பிறந்த நாளும் அனுசரிக்கிறார்கள். மனிதர்களை படைத்த இறைவனுக்கு பிறந்த நாளா?! எத்தகைய விசித்திரமான முரண்பாடு!

உறுதியான, உண்மை என்னவென்றால் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனும் இல்லை. இறைவன், மனிதனாக அவதரிக்கவும் இல்லை. அவர் ஓர் இறைத்தூதர் மட்டுமே. இந்த கிறிஸ்துவர்கள,; உண்மையில் சிலை வழிபாடு மக்களின் அவதார கொள்கையை காப்பியடித்து வைத்திருக்கிறார்கள். 

இறுதி வேதம் குர்ஆன் , கிறிஸ்துவர்களின் நிலையை பின்வருமாறு கூறுகிறது.
''இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு ஒப்பானதையே இ(ந்த கிறிஸ்து)வர்களும் கூறுகிறார்கள்.'
(இறுதி வேதம் குர்ஆன் 5:30)

கிறிஸ்துவர்கள் 'நேசத்தின்' அடிப்படையில் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வேத ஆதாரமற்ற பிறந்த நாள் கொண்டாடும் முறையே, கிறிஸ்துவர்கள் யார் என்பதை உலகுக்கு பறைசாற்றுகிறது.

உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் தினம் பெரும் உற்சாகத்தோடு அவர்களின் வேத நூலிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான மதுபானங்களுடனும் (ஏசாயா 5:11) பன்றி இறைச்சியுடனும் (லேவிய ராகமம் 11:7,8) கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி ஒழுக்க கேட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆபாச ஆடல், பாடல்கள் என்று கிறிஸ்மஸ் களைகட்டுகிறது. (விபச்சார தடை - யாத்திராகமம் 21:14). இதுதான் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் முறையா?

முஸ்லிம்களாகிய நாம், கிறிஸ்மஸ் எனும் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெயரிலான போலி பிறந்த தினத்தன்று மேற்படி செய்தியை உலகறிய செய்வதுடன் சில எச்சரிக்கை விஷயங்களையும் மேற்கொண்டாக வேண்டும்.

.பொய்யை அடைப்படையாக கொண்ட, இந்த கிறிஸ்மஸ் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் போலி மத நல்லிணக்கம் என்ற அடிப்படையிலும் கூட நாம் கலந்து கொள்ள கூடாது.

.அன்றைய நாளில் கிறிஸ்துவர்களின் உணவு பண்டங்கள் விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* கிறிஸ்மஸ் கேக் வகைகள் 'உயர் ரக' மது கலந்து செய்யப்படுகின்றன என்று அவர்களே கூறுகிறார்கள். கேக் போன்றே பிற உணவு வகைகளும் சந்தேகத்துக்கு இடமானவையே. கிறிஸ்துவர்களால் உருவாக்கப்படும் அனைத்து வகை உணவுகளிலும் பன்றி கொழுப்பு 'சுவைக்காக' சேர்க்கப்படுவதாக அவர்களே வாக்குமூலம் அளிக்கிறார்கள். ஆசிய நாடுகளில் அவ்வாறில்லை என்றெல்லாம் கருதி கொள்ளாதீர்கள். தென் கொரியாவிலுள்ள கிறிஸ்துவர்களின் உணவு வகைகளில் ஏறத்தாழ அனைத்திலும் பன்றி கொழுப்பு சேர்க்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் அவ்வாறில்லை என்று சொல்லி விட முடியாது.

* கிறிஸ்மஸ் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நீங்களோ, உங்களுடைய குழந்தைகளோ பங்கேற்காதீர்கள். அதை வேடிக்கையும் பார்க்காதீர்கள். ஏனெனில் கிறிஸ்மஸ் எனும் அவர்களின் குற்றசெயலுக்காக இறைதண்டனை அவர்கள் மீது இறங்கும் போது நீங்களும் அதில் சிக்கி கொள்வீர்கள். 

கிறிஸ்துவர்கள் நேர்வழி பெற்று இஸ்லாம் மார்க்கத்தை ஏற்க அல்லாவிடம் துஆ செய்யுங்கள்.

No comments:

Post a Comment