Tuesday 22 March 2011

இறைவன் மனித சாயலா?

இறைவனுக்கு உருவம் கற்பிக்க மனிதனுக்கு இயலுமா என்பதை இத்தனை நூற்றாண்டுகள் ஆன பின்பும் மண்ணாய் போகும் மனிதன் சிந்திக்கவில்லை.

இதோ வானம் எனது சிங்காசனம், பூமி என் பாதப்படியாக இருக்கிறது எனக்கு எப்படிப்பட்ட ஆலயம் கட்டுவீர்கள் எனவும் ஏசாயா 66:1-2 ல் கர்த்தர் கூறுவதை காணலாம்.


அந்த கர்த்தருக்கும், ஏசுநாதருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


இறைவன் மனிதனை தனது சாயலாகப் படைத்தான் என்பது தான் குறிப்பாக கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கைக்குக் காரணம் ஆதியாகமம் 1:26-27 ல் தேவன் தமது சாயலாகவும், அவன் உருவத்தின் படியேயும் மனிதனைப் படைத்ததாக எழுதப்பட்டுள்ளது. தேவ சாயலாகவே மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்த காரணத்தால் இறைவனும் மனித உருவில் பிறந்தான் என்று நம்புகிறார்கள்.


இயேசுநாதர் இறைவனாகவும், இறைமகனாக,  இறை அவதாரமாக வந்தார் என்றும், மனித சாயலிலே வந்தார் என்பதும் அறிவுள்ள மக்களுக்கு இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

 முதலில் இறைவன் மனிதத் தன்மை உடையவனா என்றால் அல்ல என்றே சொல்லும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் இரண்டு தன்மைகைளையும் உடையவராக இருந்தார் என்று தர்க்கமும் செய்கிறார்கள்.


ஆனால் அதே பைபிளில் ஏசாயா 40:18 ல் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்த சாயலை எனக்கு ஒப்பாக்குவீர்கள் என்று கர்த்தரே கேட்கும் போது நாம் எப்படி மனித சாயலுக்கு சமமாக்க முடியும்?


மீண்டும் ஏசாயா 40:25 ல் என்னை யாருக்கு நிகர் ஆக்குவீர்கள்? என்று இரண்டாம் முறையும் கேட்கும் போது, அறிவுள்ள எவரும் இறைவன் மனித சாயல் அல்ல என்பதை நன்கு விளங்கிக் கொள்வார்கள்.


இறைவனுக்கு மகன் இருந்தால் அம்மகன் இறைவனின் சாயல், மற்றும் தன்மைகள் பெற்றிருக்க வேண்டும். இறைவனுக்கு இரண்டு கை, இரண்டு கால், இருந்தால் அவனும் மனித சாயல் என்றே கொள்ள முடியும். இறைவன் உணவு உண்பார் என்றால் மகனும் உண்பார். இறைவன் தூங்கினால் மகனும் தூங்குவார்.

இறைவனுக்கு மனித குணங்கள் தன்மைகள் இல்லாதிருக்கும் போது, இயேசு நாதர் கடவுளானால் அந்தத் தன்மைகள் அவருக்கும் இருந்தாக வேண்டும்.


ஆனால், இயேசுநாதர் உணவு உண்டார், தூங்கினார் எனவே அவரிடம் இறைத்தன்மை இல்லை என்றே கொள்ளலாம்.

 ஒருவருக்கு மகன் இருந்தால் நிச்சயமாக அவருக்கு மனைவி இருப்பாள்.இறைவனுக்கு மகன் இருந்தால் இறைவனுக்க மனைவி இருந்தாக வேண்டும். இறைவனுக்க மனைவி தேவையில்லாதிருக்கும் போது மகன் இருக்க முடியாது. எனவே இயேசு நாதர் மரியமின் மகனேயல்லாமல் இறைவனின் மகன் அல்ல.


இதை உண்மைப்படுத்த திருமறைக் குர்ஆன் 6:01 ல் வசனத்தில்,

பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் அவனுக்கு மனைவி இல்லாதிருக்கும் நிலையில் மகன் எப்படி உண்டாக முடியும்? என்று இறைவன் கேட்கிறான்.

மேலும் திருமறைக் குர்ஆன் 5:75 ம் வசனத்தில்

ஏசுநாதர் மர்யாளின் மகனேயாவார். அவர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. இதற்கு முன் பல தூதர்கள் வந்து சென்று விட்டனர். இவர் தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் மற்ற மனிதர்களைப் போல் உணவு உண்பவர்களாய் இருந்தனர்.


எனவே உணவு உண்பவன் இறைவனாக, இறைமகனாக இருக்க முடியாது.

தந்தைக்கு ஒப்பான மகன் என்ற பழமொழி ஏசுநாதருக்கு பொருந்தாது. மேலும் ஏசுநாதர் இறைவனை ஒருவனும் ஒரு நாளும் கண்டதில்லை என யோவான் 1:18 ல் எழுதும் போது

அதே யோவான் 14:9 ல் என்னை கண்டவன் பிதாவைக் கண்டான் என ஏசுநாதர் கூறியதாக எப்படி இருக்க முடியும்?


ஏசுநாதர் மனித உருவில் இருந்தார். ஆனால் அவரை அனுப்பிய இறைவன் ஏசுநாதரின் உருவம் அல்ல என்றிருக்கும் போது ஏசு நாதரைக் கண்டவன் எப்படி பிதாவைக் காண முடியும்? அல்லது நானும் பிதாவும் ஒன்றே என்ற யேசுநாதர் கூறுவாரா?

அப்படிக் கூறினால் அவருக்கு நரகம் தான் என்று இறைவன் தனது திருக் குர்ஆனில் கூறுகிறான்.

இன்னும் அவர்களில் எவரேனம் அவனன்றி நிச்சயமாகக நானும் இறைவன் தான் என்று கூறுவாரேயானால் அ(த்தகைய)வருக்கு நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
(திருமறைக் குர்ஆன் 21:29)


இப்படிப்பட்ட நிலையில் ஏசுநாதர் கடவுளின் மகன் அல்லது மனிதன் கடவுளின் சாயல் என்று கூற முடியாது.

பனீஇஸ்ராயீல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற போது சிலைகளை வணங்கும் ஒரு கூட்டத்தாரை கண்டனர். தாங்களும் அதைப் போல் வணங்க நபி மூஸாவிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர் அவர்களை நோக்கி நிச்சயமாக நீங்கள் ஒரு அறிவில்லாத கூட்டத்தாராய் இருக்கிறீர்கள் என்று கூறினார். இந்த செய்தியை குர்ஆன் 7:138 ல் இறைவன் நபிகள் நாயகத்துக்கு எடுத்துரைக்கிறான்.

மேற்கூறிய இறைவசனத்தின்படி மனிதன் இறைவனை எப்படியாவது கண்டு வணங்க வேண்டும் எனத் துடிக்கிறான். அந்த ஆசை அவனை உருவ வழிபாட்டில் கொண்டு போய் விடுகிறது. இறைவனும் இதை பல தடவை கண்டித்தும் மனிதன் திருந்தவே இல்லை

.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும், கால்நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களைப் பல்கிப் பரவச் செய்கிறான். அவனைப் போன்று எப்பொருளும் இலலை. அவன் யாவற்றையும் செவியேற்பவன் பார்ப்பவன்.
 (அல்குர்ஆன் 42:11)

இந்த வசனத்தில் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை என இறைவனே கூறும் போது அற்ப மனிதன் தன் அறியாமையால் உருவங்களை அமைக்கிறான். விக்ரக வழிபாடு வேசியோடு உள்ள தொடர்பு போன்றது என்று பைபிளில் பல இடங்களில் வருகிறது. இதை அறிந்து கொண்ட பிறகும் கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் பிதா, குமாரம், தூய ஆவிக்கு உருவம் வரைகிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், சிறுபிள்ளைகளுக்குப் புரிய வைப்பதற்காக, இறை அன்பை வளர்ப்பதற்காக என்று சாக்கும் போக்குச் சொல்லி வருகிறார்கள். அவனுக்கு நிகராக எவரும் இல்லை என்று இறைவன் தன்னைப்பற்றிக் கூறும் போது நாம் ஏன் உருவப்படங்கள் வரைய வேண்டும்.


இதோ தண்ணீர்களை தம் கைப்பிடியால் அளந்து, வான்ஙகளை சாண் அளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி பர்வதங்களை துலாக் கோலிலும், மலைகளை தாரசிலும் நிறுத்தவர் யார்? என்று கர்த்தர் ஏசாயா 40:12 ல் கேட்கிறார்.


இப்படிப்பட்ட இறைவனுக்கு உருவம் கற்பிக்க மனிதனுக்கு இயலுமா என்பதை இத்தனை நூற்றாண்டுகள் ஆன பின்பும் மண்ணாய் போகும் மனிதன் சிந்திக்கவில்லை.

இதோ வானம் எனது சிங்காசனம், பூமி என் பாதப்படியாக இருக்கிறது எனக்கு எப்படிப்பட்ட ஆலயம் கட்டுவீர்கள் எனவும் ஏசாயா 66:1-2 ல் கர்த்தர் கூறுவதை காணலாம்.


அந்த கர்த்தருக்கும், ஏசுநாதருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 ஏனென்றால் இறைவன் தன்னை கண்ணியப்படுத்த நாடுகிறான். இவர்களோ உலக ஆசையால் கவரப்பட்டு அற்புதங்கள், அடையாளங்கள் தேடி அங்கும் இங்கும் ஓடி முடிவில் நம்பிக்கையற்றவர்களாக மாறுவதைக் காணலாம்.


திருமறைக் குர்ஆன் 39:67 ல் அல்லாஹ்வின் கண்ணியத்துக்குத் தக்கவாறு அவர்கள் அவனைக் கண்ணியப்படுத்தவில்லை. இன்னும் இந்த பூமி முழுவதும் மறுமை நாளில் ஒரு பிடிதான். மேலும் வானங்கள் அவன் வலக்கையால் சுருட்டப்படடதாக இருக்கும். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன் என்று கூறுகிறான்.


எனவே இறைவனை எங்கும் பயந்து நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் முஸ்லிம்கள் உருவம் வைப்பது இல்லை. உருவம் இருந்தால் அது இருக்கும் இடத்தில் மட்டும் தான அச்சம் உண்டாகும். ஆனால் முஸ்லிம்களுக்கு எஙகும் இறைவன் எங்களைப் பார்க்கிறான் என்கிற பயத்தால் பாவத்தை விட்டு விலக வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் இறைவன் மனிதன் ஆவதும் இல்லை. மனிதன் இறைவன் ஆவதும் இல்லை. எனவே இதை உணர்ந்து இறைவனுக்கு உருவம் உண்டாக்காமல் இருப்போமாக.


மேலும் இறைவனை, அவன் தன்மையை -திருக் குர்ஆன்னில்

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன் அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
(திருமறைக் குர்ஆன்2:255)

என்று இறைவன் கூறும் போது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment